வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Wednesday, March 3, 2010

லவ் யூ, அப்பா...

ஓர் ஆடவர் தன் காரைக் கழுவிக் கொண்டிருக்கையில், அவனது நாங்கு வயது மகன் ஒரு கல்லையெடுத்து காரோரத்தில் கீறினான்.  கோபத்தில் அந்த ஆடவர் அச்சிறுவனின் கையைப் பிடித்து பல தடவை அடித்தான்; தான் அடிக்கப் பயன்படுத்தியது ஒரு ஸ்பானர் என்றறியாமலேயே...

ஆஸ்பத்திரியில், பலத்த ஃப்ரெக்துரினால் அக்குழந்தை தன் எல்லா விரல்களையும் இழந்து விட்டது. அக்குழந்தை கண்களில் வலியுடன் தன் தந்தையிடம் வினவியது... 'அப்பா, என் விரல்கள் எப்போது வளரும்?'
மனம் நொந்த ஆடவர் வார்த்தையின்றி நின்றான்; தன் காரை நோக்கிச் சென்று காரைப் பல தடவை உதைத்தான். மன விரக்தியோடு காரருகே அமர்ந்தபோது, அந்தக் கீறல்கள் தன் கண்ணில் சிக்கின...

'லவ் யூ, அப்பா...'


*நான் படித்த கதை...