வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Tuesday, April 20, 2010

ஒரு தமிழனது பயணம்...

அன்று,
ஆசைகள் கொன்று,
இனிதே ஒரு வெறி எனக்கென்று,
ஈர மனதில் உதித்ததன்று...

உறக்கம் அனைத்தும் தொலைத்தேன்
ஊன் மறந்தேன்...
என்னை அற்பணித்தேன்
ஏங்கும் விழிகளின் விடியலுக்கு....
ஐயெனல் நீங்கப் போரிட்டேன்...

ஒசிந்து போனது போராட்டம் - ஏன்?
ஓர் ஏதிலன் செய்த சதித்திட்டம்
ஔவியம் படைத்த ஓர் ஏதிலன்...

விழுவது மீண்டும் எழவே...
தொடரும்...
ஒரு தமிழனது பயணம்....
நீதியை நோக்கி...

Wednesday, April 7, 2010

உனக்காக காத்திருக்கையில்...

எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளுள் ஒன்று...

எப்போதாவது

வந்து அமரும் குருவிக்கு

காத்திருக்கும் ஒற்றை பனை மரமாகிறேன்

உனக்காக காத்திருக்கையில்

Sunday, April 4, 2010

கண்ணீருடன், சீதை


மலர்களே,


ஒரு கதை சொல்கிறேன்

கேளுங்கள்.



மலரும் மணமும் பிரிந்து கண்ட்துண்டோ?

இதோ

நன்கு பாருங்கள்...

மணமின்றி வாடி நிற்கும் மலரே நான்...

தேன்ததும்பிய விழிப்பூக்களில்

பெருக்கெடுத்தோடுகிறது கண்ணீர்த்துளிகள்...

குயிலினம் வதுவை செய்ய

நான் கண்ணுற்றேன்...



மனம் பறந்ததம்மா

இராமரைத் தேடி அலைந்து அலைந்து

நித்தம் திரியுதம்மா...



வில்வளைத்து நாணேற்ற

அயோத்யாப் புத்திரன் கரம்பிடித்தேன்...

இன்றோ அயோசனம் தெரியுது கைகளிலே...



மனதில் குடிகொண்ட மன்னவா...

மாதிமையால் தினம் வாடினேன்...

புள்ளகம் தொலைத்தேன் நான் இன்று

வெறும் புள்ளாய் வாடினேன் உனக்கென்று...



வருடிச் செல்லும் இளங்காற்றே...

போய்ச்சொல் என் மணவாளனிடம்...

வழிமேல் விழிவைத்துள்ளேன்

காதலன் வருகைக்காக...

இலங்கை சிறையினின்று

மீட்டுக்கொள்ளச் சொல் என்னை...

என் மன்னவனே...

காத்திருப்பேன் அதுவரை...



கண்ணீருடன்,

சீதை

(அசோக வனத்திலிருந்து)