அன்று,
ஆசைகள் கொன்று,
இனிதே ஒரு வெறி எனக்கென்று,ஈர மனதில் உதித்ததன்று...
உறக்கம் அனைத்தும் தொலைத்தேன்
ஊன் மறந்தேன்...
என்னை அற்பணித்தேன்
ஏங்கும் விழிகளின் விடியலுக்கு....
ஐயெனல் நீங்கப் போரிட்டேன்...
ஒசிந்து போனது போராட்டம் - ஏன்?
ஓர் ஏதிலன் செய்த சதித்திட்டம்
ஔவியம் படைத்த ஓர் ஏதிலன்...
விழுவது மீண்டும் எழவே...
தொடரும்...
ஒரு தமிழனது பயணம்....
நீதியை நோக்கி...
No comments:
Post a Comment