வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Tuesday, April 20, 2010

ஒரு தமிழனது பயணம்...

அன்று,
ஆசைகள் கொன்று,
இனிதே ஒரு வெறி எனக்கென்று,
ஈர மனதில் உதித்ததன்று...

உறக்கம் அனைத்தும் தொலைத்தேன்
ஊன் மறந்தேன்...
என்னை அற்பணித்தேன்
ஏங்கும் விழிகளின் விடியலுக்கு....
ஐயெனல் நீங்கப் போரிட்டேன்...

ஒசிந்து போனது போராட்டம் - ஏன்?
ஓர் ஏதிலன் செய்த சதித்திட்டம்
ஔவியம் படைத்த ஓர் ஏதிலன்...

விழுவது மீண்டும் எழவே...
தொடரும்...
ஒரு தமிழனது பயணம்....
நீதியை நோக்கி...

No comments:

Post a Comment